செய்திகள்
கீழ்வேளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கீழ்வேளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது58). தொழிலாளி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலியால் கடந்த 3 மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.