செய்திகள்
செம்போடையில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
செம்போடையில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், செம்போடை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்பொடை காளிதாஸ் என்பவர் வீட்டின் பின்புறம் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த காளிதாஸ் (வயது35), தேத்தாக்குடி தெற்கு கிருஷ்ணமூர்த்தி (54), வேதாரண்யத்தை சேர்ந்த மணிகண்டன் (42), செம்போடையை சேர்ந்த தேவேந்திரன் (40) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.