செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை- 2 சிறுவர்கள் கைது
வீட்டில் தானியாக தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மற்றும் 17 வயதான 2 சிறுவர்கள், சம்பவத்தன்று வீட்டில் தானியாக தூங்கி கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த சிறுமியின் தாயாரை பார்த்ததும் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களை கைது செய்து தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.