செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,416 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-11-06 11:01 GMT   |   Update On 2020-11-06 11:01 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,416 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 7,06,444 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,272-ஆக அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,03,085 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,416 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 42,676 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 688 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News