செய்திகள்
கைது

இந்திய எல்லையில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது

Published On 2020-10-24 09:38 GMT   |   Update On 2020-10-24 09:38 GMT
இந்திய எல்லையில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
காரைக்கால்:

காரைக்காலில் இருந்து 75 கடல் மைல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லையில், இலங்கை மீனவர்கள் 6 பேர், ஒரு விசைப்படகில் எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர், அவர்களை விசாரித்தபோது இலங்கை மீனவர்கள் என தெரியவந்தது. எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக 6 மீனவர்களையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர், அவர்களின் படகையும் பறிமுதல் செய்து, அவர்களை காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர். 6 மீனவர்களிடம், இந்திய கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News