செய்திகள்
விபத்து பலி

காரைக்காலில் மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதல்- தொழிலாளி பலி

Published On 2020-10-24 09:25 GMT   |   Update On 2020-10-24 09:25 GMT
காரைக்கால் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கொல்லத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது42). தொழிலாளியான இவர், தனது உறவினர் உமாசங்கருடன் (35) காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பிள்ளைத்தெருவாசலில் சென்ற போது, சாலையின் நடுவே திடீரென வந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் நகர போக்குவரத்து போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் இறந்தார். உமாசங்கர் தொடர் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News