செய்திகள்
கைது

வில்லியனூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2020-10-22 12:14 GMT   |   Update On 2020-10-22 12:14 GMT
வில்லியனூர் அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டில் இருந்து மணவெளி செல்லும் பாதையில் தாங்கல் என்ற இடத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் மேலும் சந்தேகமடைந்து சோதனை போட்டதில் 200 கிராம் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்கள் போட்டு மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்ததில் வில்லியனூர் சிவகணபதி நகரை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 25), அரும்பார்த்தபுரம் வசந்தம் நகரை சேர்ந்த பிரசாந்த் என்ற சுந்தரம் (23) என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து 200 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News