செய்திகள்
கோப்புபடம்

பணி பாதுகாப்பு கோரி ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-19 11:20 GMT   |   Update On 2020-10-19 11:20 GMT
பணி பாதுகாப்பு கோரி ஊராட்சி செயலர்கள் சிவகங்கை கலெக்டர்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கை திரும்ப பெறக்கோரியும், ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும், ஊராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவருக்கு பதிலாக அவரது குடும்ப ஆண்கள் தலையிடுவதை கண்டித்தும், சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சார்லஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கவுரவ தலைவர் செல்லபாண்டியன், மாவட்ட தலைவர் பாக்கியராஜ், மாவட்ட செயலாளர் ராமநாதன், பொருளாளர் மாரிமுத்து, மாநில இணைச் செயலாளர் ரமேஷ், மாநில துணைச் செயலாளர் நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன், மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளா மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News