செய்திகள்
விபத்து பலி

தர்மபுரி அருகே விபத்தில் மாற்றுத்திறனாளி பலி

Published On 2020-10-18 10:55 IST   |   Update On 2020-10-18 10:55:00 IST
தர்மபுரி அருகே விபத்தில் மாற்றுத்திறனாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

ஈரோட்டை சேர்ந்தவர் ராஜா (வயசு 35). மாற்றுத்திறனாளியான இவர் தர்மபுரியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்தார். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News