செய்திகள்
காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
மயிலாடுதுறை குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குத்தாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். காரைக்கால் அருகே ஓடுதுறை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது சாலையையொட்டி உள்ள வீட்டின் சுவரில் அவர் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து திருபட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.