செய்திகள்
கோப்புபடம்

கணவரை தாக்கி காரில் கடத்தப்பட்ட புதுப்பெண் மீட்பு - அண்ணன் உள்பட 6 பேர் கைது

Published On 2020-10-11 13:51 GMT   |   Update On 2020-10-11 13:51 GMT
கடத்தூர் அருகே கணவரை தாக்கி காரில் கடத்தப்பட்ட புதுப்பெண் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது அண்ணன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்:

கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 25). இதேபோல் நயினாம்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தரநாயகி (22). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டு அவ்வையார்பாளையத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி சவுந்தரநாயகியின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என போனில் தகவல் வந்தது. உடனே அசோக், சவுந்தரநாயகி உள்பட 4 பேர் ஒரு காரில் நயினாம்பாளையத்துக்கு சென்றனர். அங்கு சவுந்தரநாயகியின் தந்தை வீட்டுக்கு சென்றதும், 6 பேர் கொண்ட கும்பல் அசோக்கை தாக்கிவிட்டு, சவுந்தரநாயகியை ஒரு காருக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து கடத்தி சென்றுவிட்டது. 
இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சவுந்தரநாயகியை கடத்தி சென்றதாக அவருடைய அண்ணன் வாசுதேவன் (26), மற்றும் உறவினர்களான நயினாம்பாளையத்தை சேர்ந்த சிவலிங்கம் (42), முருகன் (38), கதிர் என்கிற நல்லசிவன் (27), கரட்டடிபாளையத்தை சேர்ந்த நல்லசிவம், பெருந்துறையை சேர்ந்த சதீஸ்குமார் (34) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சவுந்தரநாயகியையும் போலீசார் மீட்டனர்.

Tags:    

Similar News