செய்திகள்
தற்கொலை

ஆத்தூர் அருகே குடும்பம் நடத்த மனைவி வராததால் என்ஜினீயர் தற்கொலை

Published On 2020-10-10 16:48 IST   |   Update On 2020-10-10 16:48:00 IST
ஆத்தூர் அருகே காதல் மனைவி குடும்பம் நடத்த வராததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆத்தூர்:

ஆத்தூர் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அறிவுக்கரசு. இவரது மகன் மனோஜ்குமார் (வயது 24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த ரமேஷ் என்பவரது மகள் திவ்யாவை (23) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஆத்தூரின் குடியிருந்து வந்தனர். 

இந்த காதல் தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மனோஜ்குமார் குடிபழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் திவ்யா அவரை பிரிந்து கோவைக்கு சென்று விட்டார். இதையடுத்து மனோஜ்குமார் அவரை அழைத்து வருவதற்காக கோவைக்கு சென்றார். ஆனால் திவ்யா, அவருடன் குடும்பம் நடத்தவர மறுத்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த மனோஜ்குமார் ஆத்தூரில் விஷத்தை குடித்தார். 

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மனோஜ்குமார் இறந்தார். காதல் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News