செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

நாகை அருகே கோவில் காவலாளி வீட்டில் நகை திருட்டு

Published On 2020-10-10 16:40 IST   |   Update On 2020-10-10 16:40:00 IST
நாகை அருகே கோவில் காவலாளி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை அருகே அந்தணபேட்டை சிவன் வடக்கு வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது37). இவர் கோவில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவில் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News