செய்திகள்
ரேஷன் அட்டைகளில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்- கலெக்டர் தகவல்
அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் அட்டைகளில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பயோ மெட்ரிக் மூலம் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு பொருட்களை பெற செல்லும் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றில் ஒன்றினை தவறாமல் எடுத்து செல்ல வேண்டும். பயோமெட்ரிக் முறை அங்கீகரிக்கப்படவில்லை என்றால், அவரது செல்போனுக்கு ஒரு முறை கடவு எண் அனுப்பப்படும். அந்த எண்ணை ரேஷன் கடை விற்பனையாளரிடம் தெரிவித்து பொருட்களை பெற்று செல்லலாம்.
ரேஷன் அட்டைதாரர்கள் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் இல்லை எனில் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு சென்று தங்களிடம் தற்போது உபயோகத்தில் உள்ள செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான உரிம பொருட்களை பெற தங்களது உறவினர்கள், தெரிந்தவர்களை நியமித்து உரிய பதில் நபர்களுக்கான விவரங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, அந்த நபர் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் பெறப்படும் ஒரு முறை கடவு சொல் மூலம் பொருட்களை பெற அனுமதித்து உத்தரவிட்ட உடன், பொருட்களை பெறலாம்.
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர் தவிர மற்றவர்கள் இந்த வசதியை தேர்வு செய்ய அனுமதி இல்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின்படி தமிழகம் தவிர பிற மாநிலத்தை சார்ந்த ரேஷன் அட்டைதாரர்கள் தமிழகத்தில் பொது வினியோக திட்ட பொருட்களை பெற இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையான அரிசி கிலோவுக்கு ரூ.3, கோதுமை கிலோவுக்கு ரூ.2 என தொகை செலுத்தி பொருட்களை பெற்று செல்லலாம். இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு நீலகிரி ரேஷன் அட்டைதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பயோ மெட்ரிக் மூலம் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு பொருட்களை பெற செல்லும் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றில் ஒன்றினை தவறாமல் எடுத்து செல்ல வேண்டும். பயோமெட்ரிக் முறை அங்கீகரிக்கப்படவில்லை என்றால், அவரது செல்போனுக்கு ஒரு முறை கடவு எண் அனுப்பப்படும். அந்த எண்ணை ரேஷன் கடை விற்பனையாளரிடம் தெரிவித்து பொருட்களை பெற்று செல்லலாம்.
ரேஷன் அட்டைதாரர்கள் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் இல்லை எனில் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு சென்று தங்களிடம் தற்போது உபயோகத்தில் உள்ள செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான உரிம பொருட்களை பெற தங்களது உறவினர்கள், தெரிந்தவர்களை நியமித்து உரிய பதில் நபர்களுக்கான விவரங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, அந்த நபர் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் பெறப்படும் ஒரு முறை கடவு சொல் மூலம் பொருட்களை பெற அனுமதித்து உத்தரவிட்ட உடன், பொருட்களை பெறலாம்.
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர் தவிர மற்றவர்கள் இந்த வசதியை தேர்வு செய்ய அனுமதி இல்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின்படி தமிழகம் தவிர பிற மாநிலத்தை சார்ந்த ரேஷன் அட்டைதாரர்கள் தமிழகத்தில் பொது வினியோக திட்ட பொருட்களை பெற இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையான அரிசி கிலோவுக்கு ரூ.3, கோதுமை கிலோவுக்கு ரூ.2 என தொகை செலுத்தி பொருட்களை பெற்று செல்லலாம். இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு நீலகிரி ரேஷன் அட்டைதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.