செய்திகள்
தற்கொலை

சிதம்பரம் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-09-23 11:27 GMT   |   Update On 2020-09-23 11:27 GMT
சிதம்பரம் அருகே சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:

மயிலாடுதுறை அருகே செம்பனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி வனசுந்தரி. இவருடைய தங்கை சரஸ்வதியின் மகள் பவித்ரா (வயது 14). இவளுடைய பெற்றோர் இறந்துவிட்டதால் பவித்ரா வனசுந்தரியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு சாலக்கரை பகுதியை சேர்ந்த வனசுந்தரியின் உறவினரான கார்த்திகேயன் மனைவி சாந்தி என்பவரின் வீட்டில் பவித்ரா வசித்து வந்தாள். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சாந்தியும், கார்த்திகேயனும் பவித்ராவை நல்ல உடை உடுத்தி சுத்தமாக இருக்காவிட்டால், உன்னை வனசுந்தரியின் வீட்டில் கொண்டு விட்டுவிடுவோம் என்று கூறி திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பவித்ரா விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தாள்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News