செய்திகள்
ஆற்றில் வழுக்கி விழுந்து காட்டு யானை உயிரிழப்பு
முதுமலை வனப்பகுதியில் ஆற்றில் வழுக்கி விழுந்து காட்டு யானை பரிதாபமாக இறந்தது. சேரம்பாடியில் சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்துள்ளது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வனச்சரக பகுதியில் இம்ப்ரல்லா ஆற்றின் கரையோரம் காட்டு யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி முதுமலை உதவி வனப்பாதுகாவலர்கள் கர்வித் கங்குவார், ஸ்ரீனிவாசன், வனச்சரகர் ராஜேந்திரன் (பொறுப்பு) உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சுமார் 15 வயதான பெண் காட்டு யானை தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு வந்தபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இந்த யானை இறந்து 3 நாட்கள் இருக்கும் என்றும், யானையின் உடலை புலி கடித்து சாப்பிட்ட காயங்கள் இருந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் ராஜமுரளி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் யானையின் உடல் பாகங்களை மற்ற வன விலங்குகள் சாப்பிடும் வகையில் வனத்துறையினர் அப்பகுதியில் வீசினர்.
இதேபோல் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் சுமார் 4 வயதான பெண் சிறுத்தைப்புலி இறந்து கிடப்பதாக சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி கூடலூர் கோட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், உதவி வனப்பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் சின்னத்தம்பி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த சிறுத்தைப்புலி அழுகிய நிலையில் கிடந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக சிறுத்தைப்புலி இறந்தது என தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் பாரத் ஜோதி, பாலாஜி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைப்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கை கிடைத்த பின்னரே சிறுத்தைப்புலி இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த இருசம்பவங்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வனச்சரக பகுதியில் இம்ப்ரல்லா ஆற்றின் கரையோரம் காட்டு யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி முதுமலை உதவி வனப்பாதுகாவலர்கள் கர்வித் கங்குவார், ஸ்ரீனிவாசன், வனச்சரகர் ராஜேந்திரன் (பொறுப்பு) உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சுமார் 15 வயதான பெண் காட்டு யானை தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு வந்தபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இந்த யானை இறந்து 3 நாட்கள் இருக்கும் என்றும், யானையின் உடலை புலி கடித்து சாப்பிட்ட காயங்கள் இருந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் ராஜமுரளி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் யானையின் உடல் பாகங்களை மற்ற வன விலங்குகள் சாப்பிடும் வகையில் வனத்துறையினர் அப்பகுதியில் வீசினர்.
இதேபோல் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் சுமார் 4 வயதான பெண் சிறுத்தைப்புலி இறந்து கிடப்பதாக சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி கூடலூர் கோட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், உதவி வனப்பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் சின்னத்தம்பி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த சிறுத்தைப்புலி அழுகிய நிலையில் கிடந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக சிறுத்தைப்புலி இறந்தது என தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் பாரத் ஜோதி, பாலாஜி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைப்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கை கிடைத்த பின்னரே சிறுத்தைப்புலி இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த இருசம்பவங்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.