செய்திகள்
திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு
திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் காலமானார்.
சென்னை:
ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர் துர்கா பிரசாத் ராவ் (63).
இவர் கடந்த 14ம் தேதி இரவு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி எம்பி துர்கா பிரசாத் ராவ் மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த துர்கா பிரசாத் ராவ் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.