செய்திகள்
கோப்பு படம்

ஈரோட்டில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-09-16 11:41 GMT   |   Update On 2020-09-16 11:41 GMT
ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஈரோடு:

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மார்க்கெட் மின்பாதையில் உயர்அழுத்த மின் புதைவட கம்பிகளை மின்கம்பங்களின் மீது பொருத்தும் பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் ஈரோடு கிருஷ்ணன் வீதி, சடையப்பவீதி, ஏ.பி.டி.ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பிரப்ரோடு, என்.எம்.எஸ். காம்பவுண்ட், ஈஸ்வரன்கோவில் வீதி, டி.வி.எஸ்.வீதி, ராமசாமி வீதி, வெங்கடாசலம் வீதி, மணிக்கூண்டு, நேதாஜிரோடு, கச்சேரிவீதி, அக்ரஹாரம் வீதி, ஜின்னாவீதி, ஆர்.கே.வி.ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை ஈரோடு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News