செய்திகள்
விபத்து

பட்டினப்பாக்கம் அருகே லாரி மோதிய விபத்தில் 4 வயது குழந்தை பலி

Published On 2020-09-11 09:27 IST   |   Update On 2020-09-11 09:27:00 IST
சென்னை பட்டினப்பாக்கம் அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது குழந்தை பலியானது.
சென்னை:

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. சிக்னலில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 4 வயது குழந்தை பலியானது. தண்ணீர் லாரி மோதியதில் சிக்னலில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.

இந்த விபத்தில் தாத்தாவுடன் பைக்கில் சென்ற 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News