செய்திகள்
டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை
டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருபவர் சரவணன் (வயது 51), இவர் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் வியாபாரம் முடிந்த பிறகு மது விற்பனை செய்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 860-ஐ பையில் போட்டு தனது மொபட்டில் உள்ள கொக்கியில் மாட்டி கொண்டு கொரோனா தொற்றுக்கு கிருமி நாசினி தெளிக்கும் கருணாமூர்த்தி என்பவருடன் வந்து கொண்டிருந்தார்.
வண்டலூர் ஏரிக்கரை அருகே வரும் போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சரவணனை வழி மறித்து உருட்டுக்கட்டையால் தாக்கி அவர் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 860 -ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து சரவணன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.