செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு முகாம் நடைபெற்றது.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக குன்றத்தூர் ஒனறிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், அப்துல் நைம் பாஷா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் கொரோனா தொற்று தடுப்பு முகாம் நடந்தது.
முகாமில் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை, சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. கபசுரகுடிநீரும் வழங்கப்பட்டது. இதில் மணிமங்கலம் ஊராட்சி செயலாளர் கோபால் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.