செய்திகள்
ஈரோட்டில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
ஈரோட்டில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு முள்ளாம்பரப்பு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி தீபிகா (வயது 22). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. தீபிகாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த தீபிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தீபிகாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.