செய்திகள்
இளம்பெண் தற்கொலை

ஈரோட்டில் இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-08-20 15:47 IST   |   Update On 2020-08-20 15:47:00 IST
ஈரோட்டில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 25). இவர்கள் 2 பேரும் கடந்த 2015-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோவை கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கோவையில் வசிக்க விரும்பாத ஸ்ரீதேவி கடந்த ஜனவரி மாதம் முதல் ஈரோடு சம்பத்நகரில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை அவரது நண்பர் ஸ்ரீதேவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஸ்ரீதேவி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஸ்ரீதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீதேவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News