செய்திகள்
மதிமுக

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: ம.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தனர்

Published On 2020-08-19 17:12 IST   |   Update On 2020-08-19 17:12:00 IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைய மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் ம.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஈரோடு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. சட்டரீதியான இந்த வெற்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஈரோட்டில் ம.தி.மு.க.வினர் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் முயற்சி வெற்றி பெற்றதாகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். தீர்ப்பு வெளி வந்த சிறிது நேரத்தில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ம.தி.மு.க. அலுவலகம் முன்பு அந்த கட்சியினர் பட்டாசு வெடித்தனர்.

Similar News