செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு மாநகர் பகுதியில் முக கவசம் அணியாத 10 ஆயிரம் பேருக்கு அபராதம் - ரூ.10 லட்சம் வசூல்

Published On 2020-08-13 08:46 GMT   |   Update On 2020-08-13 08:46 GMT
ஈரோடு மாநகர் பகுதியில் முக கவசம் அணியாத 10 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.10 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது எனவும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கலெக்டர் சி.கதிரவன் கொரோனா தொடக்கத்தின்போதே அறிவித்து இருந்தார்.

பின்னர் முக கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதே மாதம் 21-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.100 அபராதமும், அதே நபர் 2-ம் கட்டமாக முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதமும், 3-ம் கட்டமாக கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் கலெக்டர் கதிரவன் எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.

மேலும் மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 5 மாதங்களாக ஈரோடு மாநகர் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த 10 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News