செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-09 12:55 IST   |   Update On 2020-08-09 12:55:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 320 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,731 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,32,618  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,808-ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 17,187 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,731 ஆக உயர்ந்துள்ளது.

Similar News