செய்திகள்
கோத்தகிரியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கோத்தகிரியில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் கோத்தகிரியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பஜாரில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த பிலவேந்திரன் (வயது 46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கேரள மாநில லாட்டரி சீட்டுகள், ரொக்கம் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.