செய்திகள்
நீலகிரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி
நீலகிரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது மதுரை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி மேரீஸ் ஹில் பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், இந்து நகரை சேர்ந்த ஒரு ஆண், மஞ்சனக்கொரை காசா காலனியை சேர்ந்த ஒரு ஆண், விவேகானந்தா நகரை சேர்ந்த ஒரு ஆண், அருவங்காடு பகுதியை சேர்ந்த ஒரு ஆண், தூனேரியை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி டேவிஸ் டேலை சேர்ந்த ஒரு பெண், எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்த ஒரு பெண், கேத்தி உல்லாடாவை சேர்ந்த ஒரு ஆண், பிங்கர்போஸ்ட்டை சேர்ந்த ஒரு ஆண், மருத்துவ சிகிச்சைக்கு வெளியூர் சென்று வந்த பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
கோவை மாவட்டத்துக்கு சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட காக்காசோலையை சேர்ந்த ஒரு ஆண், ஒசட்டியை சேர்ந்த 2 ஆண்கள், அருவங்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், ஊட்டி ஜெயில் ஹில் பகுதியை சேர்ந்த ஒரு பெண், தும்மனட்டியை சேர்ந்த ஒரு சிறுவன், மும்பை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த தொரையட்டியை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எப்பநாடு கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள், கெங்கமுடியை சேர்ந்த ஒரு பெண், மணியட்டியை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த ஒரு ஆண், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரின் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த குன்னூரை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரியில் இதுவரை 513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 324 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் அத்தியாவசிய மருத்துவ தேவைகளை தவிர்த்து வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கலெக் டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது மதுரை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி மேரீஸ் ஹில் பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், இந்து நகரை சேர்ந்த ஒரு ஆண், மஞ்சனக்கொரை காசா காலனியை சேர்ந்த ஒரு ஆண், விவேகானந்தா நகரை சேர்ந்த ஒரு ஆண், அருவங்காடு பகுதியை சேர்ந்த ஒரு ஆண், தூனேரியை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி டேவிஸ் டேலை சேர்ந்த ஒரு பெண், எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்த ஒரு பெண், கேத்தி உல்லாடாவை சேர்ந்த ஒரு ஆண், பிங்கர்போஸ்ட்டை சேர்ந்த ஒரு ஆண், மருத்துவ சிகிச்சைக்கு வெளியூர் சென்று வந்த பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
கோவை மாவட்டத்துக்கு சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட காக்காசோலையை சேர்ந்த ஒரு ஆண், ஒசட்டியை சேர்ந்த 2 ஆண்கள், அருவங்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், ஊட்டி ஜெயில் ஹில் பகுதியை சேர்ந்த ஒரு பெண், தும்மனட்டியை சேர்ந்த ஒரு சிறுவன், மும்பை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த தொரையட்டியை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எப்பநாடு கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள், கெங்கமுடியை சேர்ந்த ஒரு பெண், மணியட்டியை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த ஒரு ஆண், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரின் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த குன்னூரை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரியில் இதுவரை 513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 324 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் அத்தியாவசிய மருத்துவ தேவைகளை தவிர்த்து வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கலெக் டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.