செய்திகள்
தற்கொலை

ஏரியில் குதித்து பெயிண்டர் தற்கொலை

Published On 2020-07-19 14:24 GMT   |   Update On 2020-07-19 14:24 GMT
ஏரியில் குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:

ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38), பெயிண்டர். இந்த நிலையில் செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது நண்பர்கள், உறவினர்கள் வேலை செய்யும் இடம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தேடி பார்த்தனர். ஆனால், எங்கும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஊட்டி ஏரியில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தது செல்வராஜ் என்பதும், மது அருந்தும் பழக்கம் உடைய அவர் தனக்கு திருமணம் ஆகாததால் விரக்தியில் இருந்ததும், இதனால் ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News