செய்திகள்
புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 584 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்படுகிறது.
ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. தொற்று உறுதியான ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கவர்னர் கிரண்பேடி நலமுடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 584 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்படுகிறது.
ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. தொற்று உறுதியான ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கவர்னர் கிரண்பேடி நலமுடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.