செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கள்ளக்குறிச்சியில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-07-07 08:05 GMT   |   Update On 2020-07-07 08:05 GMT
கள்ளக்குறிச்சியில் 41 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1205 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 280 பேர்களின் கொரோனா பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1205-ல் இருந்து 1246 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
Tags:    

Similar News