செய்திகள்
பெண் தற்கொலை

சென்னிமலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை

Published On 2020-07-05 11:55 GMT   |   Update On 2020-07-05 11:55 GMT
சென்னிமலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே உள்ள ராசாப்பாளையம், புள்ளாங்காட்டை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயி. இவருடைய மகள் அம்பிகா (வயது 23). பட்டதாரி பெண்ணான இவருக்கு சமீபத்தில் மொடக்குறிச்சியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்ய உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு விஷ மாத்திரை தின்று அம்பிகா மயங்கி விழுந்து உள்ளார். இதை கண்டதும் அவருடைய பெற்றோர், அம்பிகாவை மீட்டு சென்னிமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுபற்றி அறிந்ததும் அம்பிகாவின் உடலை சென்னிமலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 
Tags:    

Similar News