செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நீலகிரியில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-02 07:08 GMT   |   Update On 2020-07-02 07:08 GMT
நீலகிரியில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு 100-ஐ கடந்தது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 89 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதாவது தனியார் ஊசி தொழிற்சாலையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் 2-ம் நிலை தொடர்பில் இருந்த எல்லநள்ளியை சேர்ந்த 43 வயது பெண், 34 வயது பெண், பெரிய பிக்கட்டியை சேர்ந்த 48 வயது பெண், ஊட்டி அருகே போர்த்தியாடாவை சேர்ந்த 24 வயது வாலிபர், கேத்தியை சேர்ந்த 42 வயது ஆண், 38 வயது பெண், 47 வயது பெண், 60 வயது மூதாட்டி, 37 வயது ஆண், 65 வயது மூதாட்டி, 40 வயது பெண், வெலிங்டன் ஜெயந்தி நகரை சேர்ந்த 45 வயது பெண், குன்னூர் கல்லூரி சாலையை சேர்ந்த 47 வயது பெண், குன்னூர் உதயம் நகரை சேர்ந்த 45 வயது பெண், உபதலை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 27 வயது வாலிபர், அதிகரட்டியை சேர்ந்த 57 வயது ஆண், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டிமேடு பகுதியை சேர்ந்த 48 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

மேலும் கோத்தகிரி அருகே கேர்பெட்டாவை சேர்ந்த 50 வயது பெண் தனது மகள் பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் சென்று வந்தார்.

அவரிடம் இருந்து சளி மாதிரி எடுத்து பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு 107 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 39 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 68 பேரில் 44 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும், 24 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறுகிய நாட்களில் மலை மாவட்டமான நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது.

இதனால் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News