செய்திகள்
என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல்
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் நேற்று காலை திடீரென்று பாய்லர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
என்.எல்.சி.யில் ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் மனதுக்கு வேதனை தருகிறது. அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி. எவ்வளவுதான் சாதனைகள் செய்தாலும் இதுபோன்ற சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விடுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின்நிலையத்தில் நேற்று காலை திடீரென்று பாய்லர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
என்.எல்.சி.யில் ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் மனதுக்கு வேதனை தருகிறது. அந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி. எவ்வளவுதான் சாதனைகள் செய்தாலும் இதுபோன்ற சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விடுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.