செய்திகள்
கடைகளுக்கு சீல்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 கடைகளுக்கு சீல்

Published On 2020-07-01 16:10 GMT   |   Update On 2020-07-01 16:10 GMT
சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 கடை கதவுகள் இழுத்து மூடப்பட்டு நகராட்சி அதிகாரிகளால் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. நோய் பரவலை தடுக்கும் வகையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கவேண்டும், அனைத்து கடைகளும் சமூக இடைவெளி, முககவசத்தை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும், மீறினால் அபராதம் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில் காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள ஒருசில கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை என்று நகராட்சிக்கு புகார் வந்தது. அதன்பேரில் நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் ஊழியர்கள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடை, நகைக்கடை, கண் கண்ணாடி கடை, டிராவல்ஸ் நிறுவனம் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். கதவுகள் இழுத்து மூடப்பட்டு நகராட்சி அதிகாரிகளால் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. 
Tags:    

Similar News