செய்திகள்
காங்கிரஸ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-06-30 09:47 GMT   |   Update On 2020-06-30 09:47 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து நேற்று ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்திற்கே மக்கள் போராடி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து நேற்று ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News