செய்திகள்
லிங்காரெட்டிப்பாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
லிங்காரெட்டிப்பாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:
லிங்காரெட்டிப்பாளையம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 63). கூலி தொழிலாளி. இவருடைய மகள் ராஜேஸ்வரி. சம்பவத்தன்று தந்தை, மகளுக்கிடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட ராஜமாணிக்கம் வீட்டில் இருந்து வெளியேறி, அப்பகுதியில் ஒரு விவசாய நிலத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி விஜயா (50) காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லிங்காரெட்டிப்பாளையம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 63). கூலி தொழிலாளி. இவருடைய மகள் ராஜேஸ்வரி. சம்பவத்தன்று தந்தை, மகளுக்கிடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட ராஜமாணிக்கம் வீட்டில் இருந்து வெளியேறி, அப்பகுதியில் ஒரு விவசாய நிலத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி விஜயா (50) காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.