செய்திகள்
புதுவையில் கடலில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
புதுவையில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கடற்கரை சாலை பழைய கோர்ட்டு வளாகம் அருகே நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். அங்கிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரியகடை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த பெண் கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். போலீசார் கடலில் இறங்கி அந்த பெண்ணை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு முயன்ற பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கடற்கரை சாலை பழைய கோர்ட்டு வளாகம் அருகே நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். அங்கிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரியகடை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த பெண் கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். போலீசார் கடலில் இறங்கி அந்த பெண்ணை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு முயன்ற பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.