செய்திகள்
புதுச்சேரி கலெக்டர் அருண்

சொந்த ஊருக்கு செல்ல இணையதளத்தில் பதிவு செய்யலாம்- கலெக்டர் தகவல்

Published On 2020-06-23 06:23 GMT   |   Update On 2020-06-23 06:23 GMT
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள ஒருசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில் புதுவையில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டன. சொந்த ஊர்களுக்கு அவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

இனிவரும் காலங்களில் புதுச்சேரியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் அவர்களையும் அனுப்ப அரசு ஏற்பாடு செய்து உள்ளது. எனவே ஊருக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் http;//welcomeback.py.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பதிவு செய்து உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தை மீண்டும் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருகிற 26-ந்தேதிக்குள் பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News