செய்திகள்
தற்கொலை

தந்தை திட்டியதால் விஷம் தின்று மாணவர் தற்கொலை

Published On 2020-06-18 18:16 IST   |   Update On 2020-06-18 18:16:00 IST
ஜெயங்கொண்டம் அருகே தந்தை திட்டியதால் எலி மருந்தை தின்று மாணவர் தற்கொலை செய்து கொண்டான்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன். இவருடைய மகன் பிரபாகரன்(வயது 18). இவர் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரபாகரனிடம், ‘எந்த நேரம் பார்த்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டே இருக்கிறாய்‘ என்று கூறி, அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரபாகரன் நேற்று இலையூர் பேங்க் தெருவில் உள்ள ஒரு மளிகைக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட எலி மருந்தை(விஷம்) வாங்கி தின்றுள்ளார். இதையடுத்து அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட எலி மருந்தை விற்ற மளிகை கடைக்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜா ‘சீல்‘ வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News