செய்திகள்
பணம் பறிப்பு

தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு- வாலிபர் கைது

Published On 2020-06-07 09:59 GMT   |   Update On 2020-06-07 09:59 GMT
வேலூர் அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே உள்ள இன்பென்டரிரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 48). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலூர் தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தனபாலை வழிமடக்கி பணம் கேட்டார்.

தனபால் பணம் இல்லை என கூறினார். இதையடுத்து அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனபாலின் கழுத்தில் வைத்து நான் பெரிய ரவுடி என்று மிரட்டி, அவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2,600 -யை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது, அவர்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து தனபால் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது வசந்தபுரத்தை சேர்ந்த நைனா என்ற ஜெயப்பிரகாஷ் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News