செய்திகள்
மணல் கடத்தல்

வில்லியனூரில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2020-05-31 07:22 GMT   |   Update On 2020-05-31 07:22 GMT
வில்லியனூரில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வில்லியனூர்:

வில்லியனூர் கோட்டைமேடு டோபிகானா அருகில் உள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் மணல் கடத்தப்படுவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலுவுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீஸ் ஏட்டு குப்புசாமி மற்றும் போலீஸ்காரர் தமிழ்மாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த ஆனந்தவேல் (வயது 27) என்பதும், இவர் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ஆனந்தவேலுவை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் மூட்டைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுபோல் திருக்கனூர் போலீஸ்காரர்கள் முருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செல்லிப்பட்டு பாலத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு ஒரு லாரியில் மணல் ஏற்றப்பட்டு நிற்பதை கண்டனர். ஆனால், அந்த லாரியில் டிரைவர் மற்றும் கிளீனர் யாரும் இல்லை. அங்குள்ள சங்கராபரணி ஆற்றில் லாரியில் மணல் கடத்தியவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News