செய்திகள்
வெளிமாநிலத்தில் இருந்து புதுவை வருவோரை 15 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு - நாராயணசாமி தகவல்
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களை 15 நாள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தற்போது 33 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவரின் அறிவுரைப்படி 70 வயதை கடந்தவர்களை கொரோனா அதிகளவில் பாதிக்கிறது. வேறு நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் இறக்கின்றனர்.
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களை கண்டிப்பாக 15 நாள் தனிமைப்படுத்த மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளேன். மருத்துவர்கள் அறிவுரையின் படி இன்னும் 2 மாதங்களுக்கு கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பரவக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு புதுவைக்கு நிதி ஆதாரங்களை தரவில்லை. இதுகுறித்து பிரதமர், உள்துறை மற்றும் நிதி மந்திரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளேன். கொரோனாவை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நமக்கு மருத்துவ உபகரணங்கள் கொடுக்க வேண்டும்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மருந்துகளும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்கிட மத்திய அரசு தவறிவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தற்போது 33 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவரின் அறிவுரைப்படி 70 வயதை கடந்தவர்களை கொரோனா அதிகளவில் பாதிக்கிறது. வேறு நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் இறக்கின்றனர்.
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களை கண்டிப்பாக 15 நாள் தனிமைப்படுத்த மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளேன். மருத்துவர்கள் அறிவுரையின் படி இன்னும் 2 மாதங்களுக்கு கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பரவக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மருந்துகளும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்கிட மத்திய அரசு தவறிவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.