செய்திகள்
வழக்கு பதிவு

வில்லியனூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்- 12 பேர் மீது வழக்கு

Published On 2020-05-27 08:06 GMT   |   Update On 2020-05-27 08:06 GMT
வில்லியனூர் அருகே இரு தரப்பினரிடையே மோதலில் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சேதராப்பட்டு:

வில்லியனூரை அடுத்த தமிழக பகுதியான இரும்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனுஷ் (வயது42) டெய்லர். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்று கொண்டு புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பேர் தனுசிடம் ரூ.200 பணம் கேட்டனர். அதற்கு தனுஷ் கொடுக்க மறுத்ததால் அவர் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றனர். இதை தட்டிக் கேட்ட தனுசை தாக்கினர்.

இதற்கு பதிலுக்கு பதிலாக தனுஷ் தரப்பினர் கமல் தரப்பினரை தாக்கினர்.

இதுகுறித்து தனுஷ், சாமுண்டீஸ்வரி இருவரும் தனித்தனியாக கோட்டக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனுசை தாக்கிய எழில், கமல், சரண் உள்ளிட்ட 7 பேர் மீதும், கமலை தாக்கிய தனுஷ், ராஜ், விஷ்ணு உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News