செய்திகள்
தற்கொலை

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-05-26 07:32 GMT   |   Update On 2020-05-26 07:32 GMT
புதுவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் கலைவாணர் வீதியை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவருடைய 3-வது மகள் அன்னலட்சுமி (வயது24), புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்னலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News