செய்திகள்
சாராய விலை உயர்வு

சாராய விலை உயர்வால் கூலித்தொழிலாளர்கள் அதிர்ச்சி

Published On 2020-05-25 14:59 GMT   |   Update On 2020-05-25 14:59 GMT
கூலித்தொழிலாளர்கள் விலை குறைவான சாராயத்தை குடித்து வந்த நிலையில் இப்போது சாராய விலையும் உயர்த்தப்பட்டதால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
பாகூர்:

புதுவையில் 62 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதுபோல் சாராயக்கடை மற்றும் கள்ளுகடைகளும் இன்று திறக்கப்பட்டன.

ஆனால் புதுவையில் ஒன்றிரண்டு கள்ளுக்கடை மட்டுமே உள்ளதால் விலை உயர்த்தப்படவில்லை. அதேவேளையில் சாராயத்துக்கு விலை உயர்த்தப்பட்டது. ரூ.30 க்கு விற்கப்பட்ட 150 மில்லி கொண்ட சாராய பாக்கெட் ரூ.40-க்கும், ரூ.40க்கு 180 மில்லி கொண்ட சீல்டு சாராய பாட்டில் ரூ.50 என விலை உயர்த்தப்பட்டது.

பெரும்பாலான கூலித்தொழிலாளர்கள் விலை குறைவான சாராயத்தை குடித்து வந்த நிலையில் இப்போது சாராய விலையும் உயர்த்தப்பட்டதால் பெரும் அதிர்ச்சிகுள்ளாகி உள்ளனர்.

Tags:    

Similar News