செய்திகள்
கொரோனா வைரஸ்

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-05-25 14:10 GMT   |   Update On 2020-05-25 14:10 GMT
கடந்த ஒரு வாரமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக இருந்தது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு வந்த 45 வயதான ஆண் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

கடந்த ஒரு வாரமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News