செய்திகள்
கோப்பு படம்

மாற்றுத்திறனாளி வாகனம் மீது மோதிய லாரியை கண்டுபிடிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2020-05-25 18:18 IST   |   Update On 2020-05-25 18:18:00 IST
செந்துரை அருகே மாற்றுத்திறனாளி வாகனம் மீது மோதிய லாரியை கண்டுபிடிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங் குழி கிராமத்தைச்சேர்ந்தவர் கருப்பன் மகன் கருணாநிதி. இவர் உடல் ஊனமுற்றவர். இவர் தனது மூன்று சக்கர மொபட்டில் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வண்டியை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு காலைக்கடன் கழித்துக் கொண்டிருந்தார்.

அப்போது செந்துறையில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த சிமெண்ட் லாரி அந்த மூன்று சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஜெயங்கொண்டம் செந்துறை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரியை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News