செய்திகள்
கைது

ஜெயங்கொண்டம் அருகே மது விற்றவர் கைது

Published On 2020-05-25 11:24 GMT   |   Update On 2020-05-25 11:24 GMT
ஜெயங்கொண்டம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் தஞ்சாவூரான்சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமம் ரோட்டுத்தெருவை சேர்ந்த ரமேஷ்குமார்(வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News