செய்திகள்
விவசாயி தாக்குதல்

விவசாயியை தாக்கிய அண்ணன்-தம்பி கைது

Published On 2020-05-22 17:32 IST   |   Update On 2020-05-22 17:32:00 IST
உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் பொட்டகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 62). விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசன்(50) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த எழிலரசன் மற்றும் அவரது அண்ணன் விஸ்வநாதன்(65) ஆகிய 2 பேரும் சேர்ந்து ராமலிங்கத்தை தாக்கியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராமலிங்கம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசன், விஸ்வநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News